search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்"

    வேலூர் மாவட்டத்தில் பணிக்கு திரும்பாத 39 ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. #jactogeo
    வேலூர்:

    வேலூர் மாவட்ட அரசு, தொடக்க நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மொத்தம் உள்ள 18,200 ஆசிரியர்களில் 8,100 பேர் கடந்த 22-ந் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

    இதனால் அரசுப்பள்ளி மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 6000 பேர் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றதால் பெரும்பாலான பள்ளிகளில் ஒரு ஆசிரியர் கூட இல்லாத நிலை நீடித்தது. இதனால் பல இடங்களில் மாணவர்களும், பெற்றோர்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இதனிடையே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் அவர்களின் பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

    இதையடுத்து காலை முதலே ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். இந்நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் 99 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதால் அனைத்து அரசுப் பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படத் தொடங்கின.

    அதேசமயம், வேலூர் மாவட்டத்தில் 39 ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு திரும்பாதது தெரியவந்துள்ளது. அந்த ஆசிரியர்களுக்கு மட்டும் விளக்கம் கேட்டு 17பி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தெரிவித்தார்.

    வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் நேற்று காலை 10 மணி வரை பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் விவரம் பெறப்பட்டது. இதில் 39 ஆசிரியர்கள், சஸ்பெண்டு செய்யப்பட்ட 4 ஆசிரியர்களைத் தவிர மற்ற அனைவரும் பணிக்கு திரும்பியுள்ளனர்.

    இதையடுத்து அந்த 39 ஆசிரியர்களுக்கு மட்டும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு உரிய விளக்கம் அளிக்காதபட்சத்தில் அவர்களும் இடைநீக்கம் செய்யப்படுவர். மேலும் சஸ்பெண்டு செய்யப்பட்ட 4 ஆசிரியர்கள் பணியில் சேர இயலாது என்றார். #jactogeo

    பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத 1000 ஆசிரியர்கள் யார்-யார் என்று கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது. #PublicExam #SSLC #PlusTwo
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியானது.

    பொதுத் தேர்வுகளை நன்றாக எழுதியும், சரியாக மதிப்பெண் கிடைக்காத மாணவர்களுக்கு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய தேர்வுத்துறை சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

    இந்த வாய்ப்பை பயன்படுத்தி 2500-க்கும்மேற்பட்டவர்கள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தனர். மறுமதிப்பீடு முடிவுகள் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் 1000 மாணவர்களின் விடைத்தாள் கூட்டல் மற்றும் மதிப்பீடு பிழைகளால் மதிப்பெண் மாறியது.

    இந்த விடைத்தாள்களை தேர்வுதுறையினர் ஆய்வு செய்து அவற்றை திருத்திய ஆசிரியர்கள், சரிபார்த்த விடை திருத்தும் மைய அதிகாரிகள் குறித்த பட்டியல் தயார் செய்தனர்.


    இதைத்தொடர்ந்து பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத 1000 ஆசிரியர்கள் யார்-யார் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை விளக்கம் கேட்டுநோட்டீசு அனுப்பி உள்ளது.

    விடைத்தாள் திருத்துவதில் ஆசிரியர்கள் மெத்தனமாகவும், அஜாக்கிரதையாகவும் திருத்தியதால் நிறைய குளறுபடி நடந்துள்ளதால் இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நோட்டீசுக்கு விளக்கம் அளிக்காவிட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #PublicExam #SSLC #PlusTwo
    ×